படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

கவிதை: அன்று முதல் இன்று வரை

ஜெ. பிரான்சிஸ் கிருபா பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில் அபாரமான கற்பனையும், புனைவும் மண்டிக் கிடக்கின்றன. பல இடங்களில் யதார்த்தமும் புனைவும் பிணைந்து திடீர் திடீரென்று படிமங்களாக வெளிப்படுகின்றன. இவரது கவிதைகளில் காதல்வயப்பட்ட கவியின் மனம்...

எலுமிச்சங்கனியின் சுயசரிதையிலிருந்து சில குறிப்புகள்.

1. சதுர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு. கையறு பாடல்களின் புளிப்பு ஊறிப் பெருகி பழங்கஞ்சியாயிருந்தது. சோற்றுப் பருக்கைகளைப்போல குழந்தைகள் நீந்திக் களித்தனர்.   வெளுத்தத் துணிகளின்மேல் எச்சமிடும் காகங்கள் மீன் செவுள்களையும் கோழிக் குடலையும் பானையின் தூரில் மறைத்துச் சென்றன.   மரத்தடி தெய்வங்கள் கனிந்தனுப்பிய எலுமிச்சம் பழங்களால் பனங்கிழங்கு அலகுடைய செங்கால் நாரைகள் ஆடும் வீட்டினை அடை...

கிழவியும்  பிக்காஸோவும் புறாக்களும்… 

நான் முதலில் புறாக்களைக் காணவில்லை. இரண்டு இளைஞர்களை மட்டும்தான். அழகாகவும், ஆடியபடியும் அவைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். ஆடுதலில் ஓர் கவித்துவம் இருந்தது. அவர்களது முன் பக்கம் எனக்குத் தெரியாதபோதும், பின் பக்கத்தின்...

திகம்பர பாதம்

பழையாற்றின் பரிசல்துறையில் ஒரே சலசலப்பு. வந்திறங்கும் சனங்களும் நீராடி முடித்து அதிகாலை பூசைக்குச் சென்று இடம்பிடித்து நின்றுவிட விரைந்த மற்றவர்களும் எழுப்பிய சிவ முழக்கத்தில் ஸ்ரீ இந்திரமே அதிர்ந்தது. இவர்களை அதட்டியும் கழிகளால்...

மக்கள் எதிரி ஷேக்ஸ்பியரின் ஃப்ஸ்ட் ஃபொலியோ

ஷேக்ஸ்பியர் எனும் இங்கிலாந்தின் எழுத்தாளர் உலகளாவிய இலக்கிய கோட்பாடாக மாறி நூற்றுக்கணக்கான வருடங்கள் கடந்துவிட்டன. ரெனைசான்ஸ் காலகட்டத்தின் நாயகனாகத் திகழ்ந்து இங்கிலாந்தின் கலாச்சாரச் சின்னமாக அவன் கொண்டாடப்படுகிறான். பத்தொன்பதாவது நூற்றாண்டின் விக்டோரிய யுகத்தின்...

கம்பாட்டம்

நான் சென்று விளக்கை அணைத்துவிட்டு வீட்டின் ஒரு முக்கில் சுருட்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கரைகள் கிழிந்துவிட்ட கோரைப்பாயை எடுத்துவந்து தரையில் விரித்துப் படுத்துக்கொண்டேன். தாத்தா உறங்கிவிட்டதற்கான அறிகுறியாக அவரது அறையிலிருந்து வந்துகொண்டிருந்த அனக்கம் நின்றுவிட்டது. நான்...

ந.பெரியசாமி கவிதைகள்

பூனை விந்தி நடக்கிறது பூனை தவறுதலாக கால் ஒன்றை குறைச்சலாக்கி வரைந்துவிட்டேன்.   எங்களுக்குள் இயல்பாகியது அது முறைப்பதும் நான் மன்னிப்பு கேட்பதும்.   விரையும் வேறு பூனை பார்க்க அதன் கண்கள் நெருப்பாகிடும் அப்பொழுது கிண்ணத்தில் பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன்.   இன்று மறக்காமல் வரைபடத் தாள்களையும் எழுது உபகரணங்களையும் எதிர் இல்ல சிறுமிக்கு அன்பளிப்பாக்கினேன் மென்மையை ஏந்திக்கொண்டு பதுங்கிப்...

புறப்பாடு

                          1  உலகப்பற்றற்ற துறவிகளான தர்வேஷ்கள், தனது ஆன்மாவைக் கீழான மனோஇச்சைகளிலிருந்து இறைதுதியுடன் உரல்போல் சுழன்று ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் சமா எனும் சுழல் நடனத்தை வெளிப்படுத்த சிறுவர்கள் வரிசையாகப் பள்ளி ஆண்டுவிழா நிகழ்வுமேடையில் நின்றுகொண்டிருந்தனர். ...

முழுவதும் நீலம்

முன்னர் அனிமேக்கள் என்றாலே ஓர் ஒவ்வாமை எனக்கிருந்தது. என் புதல்விகள் இருவரும் இருபத்தி நான்கு மணி நேரமும் ரத்தமாய்ச் சொட்டும் அனிமேக்களை அலுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை கொடூரமான அனிமேக்களைப் பார்ப்பதனால்தான் ஜப்பானில்...

(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்.]

(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் “எனது இலக்கிய வாழ்க்கையில் கூடலூரிடம்தான் நான் மற்றெல்லாவற்றையும் விடக் கடமைப்பட்டிருக்கிறேன். வேலாயுதேட்டன், கோவிந்தன்குட்டி, தாயம் விளையாட்டுக்காரன் கோந்துண்ணி மாமா, காதறுந்த மீனாட்சி அக்கா போன்றவர்களின் ஊரான...