படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

வடாற்காடு வட்டார மொழி தீண்டத்தகாத மொழியாகவேதான் இன்னும் கூட பார்க்கப்பட்டு வருகிறது

வேலூர் மாவட்டத்தின் அதிலும் தொண்டை மண்டலப் பகுதியான பொன்னை ஆற்றின் கரையோரம் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் எழுத்தாளர் கவிப்பித்தன். புதிய மாவட்டமான ராணிப்பேட்டையில் அரசின் வருவாய்த்துறையில் பணி செய்பவர். பழைய...

வெளிய

முள் தோப்பெங்கும் மலநாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மா தான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் ராத்திரி முழுக்க தண்ணீர் மெல்லிசாகச் சொட்டிக் கொண்டிருக்கும். தண்ணீர் பிடிப்பதற்காக பெரியம்மாவுக்கு விடியற்காலை இரண்டு மூன்று...

ஒரு குடும்பம் சிதைகிறது-எஸ். எல். பைரப்பா,[கண்ணீரைப் பின்தொடர்தல்]

யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் பார்க்க நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில்...

கவிதை: அன்று முதல் இன்று வரை

ஜெ. பிரான்சிஸ் கிருபா பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில் அபாரமான கற்பனையும், புனைவும் மண்டிக் கிடக்கின்றன. பல இடங்களில் யதார்த்தமும் புனைவும் பிணைந்து திடீர் திடீரென்று படிமங்களாக வெளிப்படுகின்றன. இவரது கவிதைகளில் காதல்வயப்பட்ட கவியின் மனம்...

எலுமிச்சங்கனியின் சுயசரிதையிலிருந்து சில குறிப்புகள்.

1. சதுர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு. கையறு பாடல்களின் புளிப்பு ஊறிப் பெருகி பழங்கஞ்சியாயிருந்தது. சோற்றுப் பருக்கைகளைப்போல குழந்தைகள் நீந்திக் களித்தனர்.   வெளுத்தத் துணிகளின்மேல் எச்சமிடும் காகங்கள் மீன் செவுள்களையும் கோழிக் குடலையும் பானையின் தூரில் மறைத்துச் சென்றன.   மரத்தடி தெய்வங்கள் கனிந்தனுப்பிய எலுமிச்சம் பழங்களால் பனங்கிழங்கு அலகுடைய செங்கால் நாரைகள் ஆடும் வீட்டினை அடை...

கிழவியும்  பிக்காஸோவும் புறாக்களும்… 

நான் முதலில் புறாக்களைக் காணவில்லை. இரண்டு இளைஞர்களை மட்டும்தான். அழகாகவும், ஆடியபடியும் அவைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். ஆடுதலில் ஓர் கவித்துவம் இருந்தது. அவர்களது முன் பக்கம் எனக்குத் தெரியாதபோதும், பின் பக்கத்தின்...

திகம்பர பாதம்

பழையாற்றின் பரிசல்துறையில் ஒரே சலசலப்பு. வந்திறங்கும் சனங்களும் நீராடி முடித்து அதிகாலை பூசைக்குச் சென்று இடம்பிடித்து நின்றுவிட விரைந்த மற்றவர்களும் எழுப்பிய சிவ முழக்கத்தில் ஸ்ரீ இந்திரமே அதிர்ந்தது. இவர்களை அதட்டியும் கழிகளால்...

மக்கள் எதிரி ஷேக்ஸ்பியரின் ஃப்ஸ்ட் ஃபொலியோ

ஷேக்ஸ்பியர் எனும் இங்கிலாந்தின் எழுத்தாளர் உலகளாவிய இலக்கிய கோட்பாடாக மாறி நூற்றுக்கணக்கான வருடங்கள் கடந்துவிட்டன. ரெனைசான்ஸ் காலகட்டத்தின் நாயகனாகத் திகழ்ந்து இங்கிலாந்தின் கலாச்சாரச் சின்னமாக அவன் கொண்டாடப்படுகிறான். பத்தொன்பதாவது நூற்றாண்டின் விக்டோரிய யுகத்தின்...

கம்பாட்டம்

நான் சென்று விளக்கை அணைத்துவிட்டு வீட்டின் ஒரு முக்கில் சுருட்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கரைகள் கிழிந்துவிட்ட கோரைப்பாயை எடுத்துவந்து தரையில் விரித்துப் படுத்துக்கொண்டேன். தாத்தா உறங்கிவிட்டதற்கான அறிகுறியாக அவரது அறையிலிருந்து வந்துகொண்டிருந்த அனக்கம் நின்றுவிட்டது. நான்...

ந.பெரியசாமி கவிதைகள்

பூனை விந்தி நடக்கிறது பூனை தவறுதலாக கால் ஒன்றை குறைச்சலாக்கி வரைந்துவிட்டேன்.   எங்களுக்குள் இயல்பாகியது அது முறைப்பதும் நான் மன்னிப்பு கேட்பதும்.   விரையும் வேறு பூனை பார்க்க அதன் கண்கள் நெருப்பாகிடும் அப்பொழுது கிண்ணத்தில் பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன்.   இன்று மறக்காமல் வரைபடத் தாள்களையும் எழுது உபகரணங்களையும் எதிர் இல்ல சிறுமிக்கு அன்பளிப்பாக்கினேன் மென்மையை ஏந்திக்கொண்டு பதுங்கிப்...