செண்பா சித்தி
“வீட்ட அலங்கோலம் பண்ணி வைச்சி இருக்கான், ஹாலுகுள்ள ஷூ கிடக்கு. எத்தனை டைம் சொல்றது ஷூ போட்டு வீட்டுக்குள்ளே வராதேன்னு”
இப்போ தான் கொஞ்ச நேரம் முன்ன முழிப்பு தட்டுச்சி. எழுந்திரிக்க மனசு இல்ல....
பா.திருச்செந்தாழை கவிதைகள்.
ரகசியங்களற்றவனின்
நிழலில்
கண்ணாடி வளர்கிறது.
எப்படியாயினும்,
இதற்கு ரகசியமெனப் பெயரிட
நான் இன்னொருவருக்கும்
இதனை தத்துக்கொடுக்க வேண்டியதிருக்கிறது.
ரகசியங்கள் பெறுமதியானவை
என்பதிலிருந்து
வெளியேறிவிட்ட என் புதுவயதில்
நான் சிறிய காற்றாடிகளை
நீண்ட தொலைவில் செலுத்தும்
ஞானம் பெற்றேன்.
எல்லாவற்றிலிருக்கும்
ரகசியங்களை
என் வெகுளித்தனம் சுரண்டி விலக்குகிறது.
அங்கே குருதியற்ற ஓருடல்...
அவள் நர்ஸ் ஆகிறாள்
வழமையாக காலை ஐந்தரை மணிக்கு கண் விழித்துப் பழகியது அவ்னி வீட்டு நாய். எப்போதும் அவ்னி சுத்தமாக இல்லாவிட்டாலும் நாயைச் சுத்தமாக வைத்திருப்பான் கழுத்தின் அளவுக்கு ஒரு வெள்ளி வளையம். ஏழாயிரத்து ஐந்நூறு...
வெதும்பல்
அன்று சுபத்ராவுக்கு சமையல் கட்டில் வேலை நிறைய இருந்தது. அம்மாவின் கைமணம் போல் இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே சமைப்பாள். கற்றும் கொண்டாள். ஒருவேளை அப்பா பரமேசன் பேசும் பேச்சுக்களிலிருந்து வந்ததாகக் கூட இருக்கலாம்....
மதுரை குடைவரைகளில் பசுமைநடை
சாலையின் இருமருங்கிலும் உள்ள மரங்கள் அழகாய் இணைந்து குடைவரை போலிருப்பதை பார்க்கலாம். இதில் குடைவரை என்ற சொல்லை குறித்து தான் நாம் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம். சங்க காலத்தில் கோயில்கள் கோட்டம் என்ற...
“கனவு குதித்தல்” -Long Day’s Journey into the Night திரைப்படம் குறித்தான ஒரு...
நினைவுகள் என்பது சாசுவதமானதோ முழுமையானதோ அல்ல, மாறாக தவம் செய்ய நிற்கும் கொக்கின் காலைச் சுற்றிச் சுழித்தோடும் ஆழமற்ற நதி வரையும் தற்காலிகத்தனத்தின் உருவகம். உடைந்து சிதறிய கண்ணாடிக் குடுவையிலிருந்து தெறித்து விலகிக்...
உதிரும் கணத்தின் மகரந்தம்.
சமீபமாக துர்நாற்றத்தை கசிந்து
பரப்பிக்கொண்டிருந்த அஹமத் ஈஸாக்கின்
வீட்டு பேய்க்கிணற்றை தூர் வாரத் துவங்கியது
பொக்லைன் இயந்திரம்
அரைகுறை ஆடைகளோடு
தாதியின் தடிக்குப்பின்னிருந்து
அவ்விடம் தப்பியோடிட பிரயத்தனித்ததின் பலனாய்
ஹிஜாப்பை எடுத்துவர சென்ற சில நொடிகள் வாய்த்தது
ஒவ்வொருமுறையும்
இயந்திரத்தின் கொண்டிகளிலிருந்து
சிந்தைக்கெட்டாத அசாத்திய பொருட்கள்
அகப்படும்படியானது
ஏழு ஆண்டுகளுக்கு...
கெளபாய் காமிக்ஸ் உலகின் தலைமகன்.
அமெரிக்க கெளபாய்கள்.. கி.பி.1800களில்-சுட்டெரிக்கும் பாலைவனங்கள், தகிக்கும் பாறை முகடுகள், உயிரை விட மதிப்பு மிக்க தண்ணீர், கால்நடைகளை வளர்க்கும் கெளபாய்கள், பண்ணைகள், திமிர்பிடித்த வெள்ளையின முதலாளிகள், சுரங்கத்தில் தங்கத்தை தேடி வாழ்க்கையை தொலைக்கும்...
துஷ்யந்த் சரவணராஜின் பொம்மையாக இருக்கவே பிரியப்படுகிறார் கடவுள்
குழந்தைகளுடன் பொழுதை கழிப்பதென்பது சாரல் மழையில் நனைவது போன்றது. இக்கவிதைத் தொகுப்பை நமக்களித்த கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ் அவர்கள் நம்மையும் அம்மழையில் நனைய வைக்கிறார். கவிஞர் உருவாக்கிய வீட்டில் குழந்தைகளுடன் நாமும் குழந்தையாக...
பேதமுற்ற போதினிலே -1
கவிதையை வாசிக்கத் தொடங்கும் ஒருவர் அதனை தன்னளவில் முழுமையான ஒன்றாக முதலில் உணரவேண்டும். வைரம் எவ்வாறு பட்டை தீட்டப்பட்டு பல பரிமாணங்களில் ஜொலிக்கிறதோ, ஒரு கடுகு தன்னளவில் முழுமையான ஒன்றாக எப்படி இருக்கிறதோ,...















