படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

புறப்பாடு

                          1  உலகப்பற்றற்ற துறவிகளான தர்வேஷ்கள், தனது ஆன்மாவைக் கீழான மனோஇச்சைகளிலிருந்து இறைதுதியுடன் உரல்போல் சுழன்று ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் சமா எனும் சுழல் நடனத்தை வெளிப்படுத்த சிறுவர்கள் வரிசையாகப் பள்ளி ஆண்டுவிழா நிகழ்வுமேடையில் நின்றுகொண்டிருந்தனர். ...

முழுவதும் நீலம்

முன்னர் அனிமேக்கள் என்றாலே ஓர் ஒவ்வாமை எனக்கிருந்தது. என் புதல்விகள் இருவரும் இருபத்தி நான்கு மணி நேரமும் ரத்தமாய்ச் சொட்டும் அனிமேக்களை அலுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை கொடூரமான அனிமேக்களைப் பார்ப்பதனால்தான் ஜப்பானில்...

(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்.]

(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் “எனது இலக்கிய வாழ்க்கையில் கூடலூரிடம்தான் நான் மற்றெல்லாவற்றையும் விடக் கடமைப்பட்டிருக்கிறேன். வேலாயுதேட்டன், கோவிந்தன்குட்டி, தாயம் விளையாட்டுக்காரன் கோந்துண்ணி மாமா, காதறுந்த மீனாட்சி அக்கா போன்றவர்களின் ஊரான...

முதற்கனலின் பிதாமகன்

இருபத்தியாறாயிரம் பக்கங்கள் இருபத்தியாறு தொடர் நாவல்கள் என ஏழு வருடங்கள் தொடர்ந்து எழுதி மகாபாரதத்தின் மறு ஆக்கமான "வெண்முரசு" எனும் நவீன காவியத்தைப் படைத்து தமிழ் இலக்கியத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பெருமை...

கத்துங் குயிலோசை

அந்தக் குயிலின் குரல்வளையைத் தன் கைகளால் நெறிப்பதைப் போலத் தனக்கு வந்த அந்தக் கனவின் பயங்கரம் தாளாது அவன் விழித்துக் கொண்டபோது நள்ளிரவு மணி இரண்டு. அவன் வீட்டுப் பின்புறத் தோட்டத்திலிருந்த மாமரத்திலிருந்து...

இடாகினி கதாய அரதம்

முருகபூபதியின் நாடகங்களை எப்போதும் நான் தவறவிடுவதில்லை. பெங்களூரில் எங்கு நடப்பினும் சென்று பார்க்கத்தவறுவதில்லை.  அதையே இந்த இடாகினியின் முடிவில் நிகழ்த்துக் கலைஞர்கள் மூட்டை முடிச்சினைக் கட்டிக் கொண்டு இருக்கும்போது  அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் கூறினேன். இந்த...

வெண்மார்பு மீன் கொத்தி

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பல வகை மீன் கொத்திகளிருப்பினும் பரவலாக காணக் கூடியது வெண்மார்பு மீன்கொத்தி ஒன்றே ஆகும். இதனை  வெள்ளைத் தொண்டை மீன் கொத்தி, வெள்ளை மார்பக மீன் கொத்தி, மர மீன்...

பாற்கடல்

மஞ்சுளா உண்டாகியிருந்தது பார்க்கவே மகா அம்சமாய் இருந்தது. பெண்களே கனவுப் பிறவிகள் தானே, என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டான் சபாபதி. ஆசைப்பட்ட பிடித்த விஷயம் ஒன்று நடந்து விட்டால் அவர்கள் முகம் மருதாணியிட்டாப்...

நிலாகண்ணன் கவிதைகள்

அவளொரு வயலினிஸ்ட் பெண்மையின் பொருள்படும் நிழலும் அன்பு திரண்ட கனியுமாக தன்னை மூடிக்கொள்ளாத அம்மரம் எப்போதும் திறந்திருந்தது கன்னி மரியாவைப் போல அவளுடைய கண்களின் ஆழத்தில் எப்போதும் இரக்கத்தின் சொல் இருக்கும் அவள் ஒரு வயலினிஸ்ட் கிழிந்த ஆடைகளை சிறு...

தூய வெண்மையின் பொருளின்மை

இலைகளற்றக் கிளைகளில் விளையாட யாருமற்ற கிரணங்கள், நிறங்களைத் துறந்து தியானித்து உக்கிர வெண்மையை ஓலமிடுகின்றன நிறங்களின் வெறுமையில் நிறையும் வெண்மையில் திசையெங்கும் பிரதிபலித்து மீண்டு வந்து சேரும் மேலும் சிறிதளவு வெண்மை. தனிமையின் விடமேறி நீலம்பாரித்து நிற்கும் வானம் மேகங்கள் அற்று மேலும் வெறுமை கூட நீலம் அடர்கிறது.. பனி பூத்து பனி கொழிக்கும் வனமெங்கும் தானே எதிரொளித்து சோம்பிக் கிடக்கும் தூய வெண்மையின் பொருளின்மையில், எப்படியாவது ஒரு...